ஆப்நகரம்

ஜெட் வேகத்தில் செல்லும் வெங்காய விலை: இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு!

வெங்காய விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில், அதனை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது

Samayam Tamil 23 Oct 2020, 10:36 pm
வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரத்து குறைவு காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை மலை போல் உயர்ந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் அதிகமாக சென்றுவிட்டது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அரசு சார்பில் பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய பற்றாக்குறையை போக்க எகிப்து வெங்காயங்கள் 135 டன் அளவுக்கு சென்னைக்கு வந்துள்ளன.

இதனிடையே, வெங்காய விலையை சமாளிப்பதற்காக டிசம்பர் 15ஆம் தேதி வரை வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் கையிருப்பில் இருந்து கூடுதல் வெங்காயம் சந்தைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை!

இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை வனிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி