ஆப்நகரம்

டபுள் டக்கர் பேருந்து: மத்திய அரசின் சூட்சமம்

மாநிலங்களுக்கு இடையே டபுள் டக்கர் பேருந்துகள் இயக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

TNN 21 Sep 2017, 11:48 am
டெல்லி: மாநிலங்களுக்கு இடையே டபுள் டக்கர் பேருந்துகள் இயக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil centre for double decker buses on inter state routes
டபுள் டக்கர் பேருந்து: மத்திய அரசின் சூட்சமம்


தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. காரில் செல்பவர்களை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வைக்க முடியாது.

டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் தற்காலிகக் குறையும். அதில் ஏசி வசதியுடன் இரு மடங்கு பயணிகளுக்கு இடம் இருக்கும் என்பதால் போக்குவரத்துத் துறைக்கு லாபமும் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்துடன், டில்லி - ஆக்ரா, லக்னோ - கோரக்பூர், வதோதரா - மும்பை, பெங்களூரு - மங்களூர் உள்ளிட்ட 75 வழித்தடங்களில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த வழித்தடங்களில் தொடங்கப்படும் டபுள் டக்கர் பேருந்து சேவைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.

அடுத்த செய்தி