ஆப்நகரம்

புதிய வேளாண் சட்டங்கள்; பெரிய குண்டை தூக்கிப் போட்ட மத்திய அரசு!

விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 12:47 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் கார்ப்பரேட் மயமாகும் ஆபத்து இருப்பதாக கூறி பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளுக்காக, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கக்கூட மத்திய அரசு ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பியது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் 45 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.
Samayam Tamil Farmers Protest


அதில், கடந்த 2000ஆம் ஆண்டு வேளாண் சட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட சங்கர்லால் குரு தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முதல் தற்போது வரையிலான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் ஒரேவொரு இடத்தில் மட்டும் தான் விவசாயிகள் போராடுகின்றனர்.

திருப்பதியில் இப்படியொரு அசத்தல்; தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!
இதன்மூலம் பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதை அறிய முடிகிறது. மேலும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் சட்டங்களை சில விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் மட்டுமே எதிர்க்கின்றனர். இது தவறான புரிதலின் பேரிலும், சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாலும் நிகழ்ந்துள்ளது.

ஒரே இரவில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வல்லுநர்கள் அளித்த பரிந்துரைகள், விவசாயிகளின் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

நைய்யப்புடைனு விஜய் சொன்னதும் இப்படி ஆகிடுச்சே: ரசிகர்கள் வருத்தம்
மாறி வரும் விவசாய வர்த்தகம், விவசாய பொருளாதாரம், இ-வர்த்தகம், அதிகரிக்கும் விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப நமது சந்தையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். தற்போது நடைமுறையில் இருக்கும் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு போதிய வருவாயை ஈட்டித் தரும் நிலையில் இல்லை. எனவே மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் உறுதியாக நல்ல பலன்களைத் தரும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி