ஆப்நகரம்

ஆதாரை வங்கிக்கணக்கோடு இணைக்கும் காலக்கெடு நீடிப்பு!

டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதாரை வங்கிக்கணக்கோடு இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவை 2018 மார்ச் 31 மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.

TNN 13 Dec 2017, 5:39 pm
டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதாரை வங்கிக்கணக்கோடு இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவை 2018 மார்ச் 31, மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.
Samayam Tamil centre indefinitely extends deadline for aadhaar bank account linkage to march 21
ஆதாரை வங்கிக்கணக்கோடு இணைக்கும் காலக்கெடு நீடிப்பு!



வங்கி கணக்கு, காப்பீடு கணக்கு உள்ளிட்டவைகளோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதற்காகான கடைசி நாள் 2017 டிசம்பர் 31 ம் தேதி என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனிடையே, வங்கி கணக்கு, பான்கார்டு, மொபைல் எண் ஆகியவற்றோடு ஆதார் எண்னை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிரத்து சுப்ரீ்ம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், வங்கிக்கணக்கு மற்றும் காப்பீடு கணக்கு உள்ளிட்டவைகளோடு ஆதார் எண்னை இணைக்கும் கடைசி நாள் டிசம்பர் 31 என்ற அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மேலும், இதற்கான கடைசி தேதி மார்ச் 31 2018 வரையில் நீட்டிப்பு செய்துள்ளது. பான்கார்டுடன் ஆதார் இணைக்கும் கடைசி நாளாக மார்ச் 31, 2018 வரை நீட்டிப்பு செய்து கடந்த 9 தேதி கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி