ஆப்நகரம்

கலாசார குழுவை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு?

இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 27 Sep 2020, 3:53 pm
இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்திய தொல்பொருள் சங்கத்தின் தலைவர் கே.என்.திக்‌ஷித், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல் ஆர்.எஸ்.பிஷ்த், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பி.ஆர்.மணி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, உலக பிராமண கூட்டமைப்பின் “சங்மார்க்” தலைவர் எம்.ஆர்.ஷர்மா உள்ளிட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 16 பேர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், இந்த குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் இல்லை. குறிப்பாக புகழ்பெற்ற கடந்த காலத்தையும், பழமையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரீகத்தையும் கொண்டுள்ள தமிழகத்திலிருந்து ஒருவர் கூட உறுப்பினராக இடம்பெறவில்லை.

அதேபோல், மத்திய அரசு அமைத்துள்ள 16 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் ஆய்வாளர் கூட இடம்பெறவில்லை என்பதும், வடகிழக்கு மாநிலத்தவர்களோ, பட்டியலினத்தவர்களோ, சிறுபான்மையினரோ ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கலாசார ஆய்வு குழுவில் தமிழர்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கலாசாரம் குறித்து , பட்டியலினத்தவர்களோ, சிறுபான்மையினரோ பேசக்கூடாதா அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி, இந்திய நாட்டின் 12,000 ஆண்டுகளுக்கும் முந்தைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பரிணாம வளர்ச்சியை கண்டறிவதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன், இக்குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல், கலாசாரத்தை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் பெண்களும் இல்லை. திராவிட கலாசாரத்தை அறிந்த தென்னிந்தியர்களோ ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியும் காலாசார குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி