ஆப்நகரம்

மத்திய அரசின் வழிமுறைகளை மீறுகிறது கேரளா : மத்திய அரசு கடிதம்

மத்திய அரசு சொன வழிமுறைகளை மீறுவதாக கேரள அரசின் வழிமுறைகள் இருப்பதாக மத்திய அரசு கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2020, 11:09 pm
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக கேரள அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் இருப்பதாக மத்திய அரசு கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Samayam Tamil pinarayi modi


அந்தக் கடிதத்தில்,
17.04.2020 தேதியிட்ட்டு கேரள அரசு வெளியிட்ட ஆணையின்படி அமல்படுத்தப்பட்டுள்ள, ஊரடங்கு வழிமுறைகள் சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், 15.04.2020 தேதியிட்டு மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு வழிமுறைகளை மீறுவதாக உள்ளன.

உள்ளூர் தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தல், சலூன் கடைகள், உணவகங்கள், புத்தகக் கடைகள் , உள்ளாட்சி நிர்வாகத்துக்குட்பட்ட சிறு குறு தொழில்கள், குறைந்த தொலைவுக்கு பஸ் போக்குவரத்து, காரின் பின்புறத்தில் இருவருக்கு அனுமதி உள்ளிட்டவை கேரள அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்த அறிவிப்பு, பேரிடர் மேஎலாண்மைச் சட்டம் 2005இன் கீழ் மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகளை மீறுவதாக இருக்கிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி