ஆப்நகரம்

சூழலை மாசுபடுத்தினால் கிரிமினல் வழக்கு: மத்திய அரசு எச்சரிக்கை

சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் தண்டனையாக விதிக்க இடமிருக்கிறது.

Samayam Tamil 28 Oct 2018, 3:59 pm
சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Samayam Tamil 66397125


தலைநகர் டெல்லி மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. காற்றில் மாசுபாடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

டெல்லியைச் சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குப் பின் பயிர்க்கழிவுகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதன் காரணமாகவும் டெல்லியில் காற்றுமாசு ஏற்படுவதாகப் குற்றச்சாட்டு நிலவுகிறது. டெல்லி மற்றும் புறநகரில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளன.

இந்நிலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால், அவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் தண்டனையாக விதிக்க இடமிருக்கிறது.

criminal cases, polluters, environment protection act, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,

அடுத்த செய்தி