ஆப்நகரம்

மாடுகளுக்கும் இனி ஆதார் எண் கட்டாயம்: அதிரடி காட்டும் மத்திய அரசு

மாடுகளுக்கும் இனி ஆதார் எண் போன்று அடையாள எண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 24 Apr 2017, 4:49 pm
டெல்லி: மாடுகளுக்கும் இனி ஆதார் எண் போன்று அடையாள எண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil centre to sc says cows need aadhaar like identification too
மாடுகளுக்கும் இனி ஆதார் எண் கட்டாயம்: அதிரடி காட்டும் மத்திய அரசு


பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், அதன்மூலமே அரசின் நலத் திட்டங்களை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பிற திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று கூறி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மனிதர்களுக்கும் மட்டுமல்லாமல், மாடுகளுக்கும் இனி ஆதார் எண் போன்று ஒரு அடையாள அட்டை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் மூலம் உரிய நேரத்தில் தடுப்பூசி, அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.

மேலும் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தி உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க வல்லுநர்களை கால்நடை வளர்ப்பு துறை நியமித்துள்ளது. பின்னர் அடையாள அட்டையை மாட்டின் காது மடலில் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா நடைமுறைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, நடப்பாண்டில் மட்டும் 88 மில்லியன் மாடுகளுக்கு அடையாள எண்ணை வழங்க உள்ளது. அதற்காக ரூ.148 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த செயலில் ஒரு லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட உள்ளனர்.

In an effort to stop cow smuggling, the Centre has made a proposal to the Supreme Court recommending a 12-digit unique aadhaar number for every cow in the country.

அடுத்த செய்தி