ஆப்நகரம்

விவசாயிகள் வருவாய் இரு மடங்கு உயரும்: அருண் ஜெட்லி

விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்கு உயர்த்த மத்திய அரசு உறுதி எடுத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

TNN 16 Dec 2017, 6:47 pm
டெல்லி: விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்கு உயர்த்த மத்திய அரசு உறுதி எடுத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Samayam Tamil centre working on doubling the income of farmers
விவசாயிகள் வருவாய் இரு மடங்கு உயரும்: அருண் ஜெட்லி


டெல்லியில் நபார்டு வங்கி இன்று நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய துறை மற்றும் கிராம பொருளாதாரம் பற்றி மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது. உலகமெங்கும் விவசாயிகள் பெருமைக்கு உரியவர்களாக உள்ளனர். இந்திய பொருளாதாரமும் விவசாயிகளை சார்ந்திருப்பதாகும். என்று கூறினார்.

தொடர்ந்து, விவசாயிகளுடைய வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றார். வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கான மானியத்தை நேரடியாக வழங்குகின்றன என்றும் விவசாயக் காப்பீடு பயிர்கள் அழியும் நிலை ஏற்படும் போது கைகொடுக்கும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.

அடுத்த செய்தி