ஆப்நகரம்

மோடி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி, பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

TNN 5 Aug 2016, 4:20 pm
புதுதில்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி, பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Samayam Tamil chandrababu naidu meets pm modi
மோடி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு


தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு உத்தரவாதம் அளித்திருந்து. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் சிறப்பு அந்தஸ்து வாக்குறுதியை அளித்தது.

அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுமாறு ஆந்திர அரசியல் தலைவர்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, நாடாளுமன்ற இரு அவைகளிலும் அம்மாநில உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி, பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, அவருடன் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி