ஆப்நகரம்

பிரதமரை சந்தித்தார் சந்திரசேகர ராவ் ; ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை

தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்தார்.

Samayam Tamil 4 Oct 2019, 8:31 pm
தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்தார்.
Samayam Tamil modi - chan meet


இந்த சந்த்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது . இந்த சந்திப்பின் போது, சுமார் 22 பிரச்சினைகளுக்கான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் சந்திரசேகர ராவ் அளித்தார். மேலும் சுமார் 450 கோடி ரூபாய் நிதிக்கான கோரிக்கையையும் பிரதமரிடம் தெரிவித்தார்.

பிரதமரின் பிரத்யேக திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தெலங்கானாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலுவையில் கிடக்கும் ரயில்வே பணிகளை முடிப்பதற்கும் மத்திய அரசிடம் நிதியுதவி கோரினார்.

அடுத்த செய்தி