ஆப்நகரம்

தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லாண்டர் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் முயற்சி

கடைசி நிமிடங்களில் விக்ரம் லாண்டர் தகவல் தொடர்பை இழந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட தகவல்களை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயிற்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Sep 2019, 2:47 am
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம், ஆக.,20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி, முக்கிய நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிகளை விஞ்ஞானிகள் இன்று மேற்கொண்டனர்.
Samayam Tamil vikram


கடைசி நிமிடங்களில் விக்ரம் லாண்டர், தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
இதனிடையே, விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார். பின்னர் மாணவர்களிடன் பேசிவிட்டு இஸ்ரோ மையத்தை விட்டு புறப்பட்டார்.

அடுத்த நடவடிக்கையாக, ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லாண்டர் கருவியை தொடர்ப்பு கொள்ள விஞ்ஞானிகள் முயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 100 கிலோமீட்டர் இடைவெளியில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் பகுதியை நோக்கி இயக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி