ஆப்நகரம்

‘சிவ’சேனா வை ‘தாக்கரே சேனா’ என்று மாற்றிக்கொள்ளுங்கள்: சிவாஜி வழித்தோன்றல் சிவேந்திரராஜ் போசாலே

இவர் ( போஸ்லே) எழுதிய ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற புத்தகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன​​.

Samayam Tamil 15 Jan 2020, 4:23 pm
சத்ரபதி சிவாஜியையும் பிரதமர் நரேந்திரமோடியையும் ஒப்பிட்டு நூல் எழுதிய பாஜகவைச் சேர்ந்த எம்.பி. போசாலே, கலவரங்களைத் தூண்டிய கட்சிக்கு சிவாஜியைப் பின்பற்றி சிவசேனா என்ற பெயர் எதற்கு? அதனைத் தாக்கரே சேனா என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sivendra raj bhosale


இவர் ( போஸ்லே) எழுதிய ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற புத்தகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த போஸ்லே தெரிவித்ததாவது, “பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயால், பிரதமரை சிவாஜியுடன் ஒப்பிடத் துணிந்து 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சிவாஜி மகாராஜ் ஒரு உலகளாவிய உத்வேகம். அவருடன் ஒப்பிடும் அளவுக்கு அவர் உயரத்துக்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரைப் பிரதமருடன் ஒப்பிடும் அளவுக்கு சிலர் தங்கள் தன்னிலை மறந்துவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் இருக்கும் சிவாஜியின் வாரிசுகள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று சிவசேனாவினர், பாஜகவைக் கேட்டுவரும் நிலையில், பாஜகவினர் இதற்கு அளித்த பதில் சிவசேனாவின் பெயரைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

அதாவது, “இந்த சிவசேனா கட்சியின் சேனா பவனைப் பாருங்கள். அங்கே பால் தாக்கரே படம் மேலே வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே சத்ரபதி சிவாஜியின் படம் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்று கூறும் சேனா, அதன் பெயரை தாக்கரே சேனா என்று மாற்ற வேண்டும்.

சிவாஜியின் பெயரில் கலவரங்களைத் தூண்டிய கட்சிதான் சிவசேனா. அப்படியிருக்க சிவசேனா என்ற பெயர் எதற்கு, சிவாவை அகற்றிவிடுங்கள். தாக்கரே சேனா என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கட்சியின் தரத்தை அறிந்து எத்தனை இளைஞர்கள் வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.” என்றும் போசாலே தெரிவித்துள்ளார்.

மேலும் மகராஷ்டிராவில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரசு சந்தர்ப்பவாத அரசு என்பதை அறிவோம் என்றும் போஸ்லே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி