ஆப்நகரம்

மோடி, மோடி என கூவினால் பசி அடங்காது: பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்

முதலமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய பேரணியை தொந்தரவு செய்தவர்களுக்கு, தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

TNN 2 Apr 2017, 2:25 pm
டெல்லி: முதலமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய பேரணியை தொந்தரவு செய்தவர்களுக்கு, தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil chanting modi modi wont satiate hunger arvind kejriwal tells disruptors
மோடி, மோடி என கூவினால் பசி அடங்காது: பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்


தலைநகர் டெல்லியில் வரும் 23ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரசார பேரணியை முதலமைச்சர் கெஜ்ரிவால் நடத்தினார். இந்நிலையில் 2வது முறையாக கவுதம் விஹார் சவுக் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் பிரசார பேரணி நடைபெற்றது. அப்போது அவரது பேரணியை தொந்தரவு செய்யும் வகையில் சிலர், மோடி மோடி என்று கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், மோடி மோடி என்று கூவினால் உங்களின் பசி அடங்காது என்று குறிப்பிட்டார். பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தண்ணீர் மற்றும் மின்சார கட்டண உயர்வை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இன்னும் ஓராண்டில் டெல்லி தூய்மையான நகரமாக மாறும் என்று உறுதியளித்தார். மின்கட்டணத்தை பாதியாக குறைத்தும், தண்ணீரை இலவசமாக அளித்து, கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொகை ஊழலை ஒழித்ததன் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், பிரிவு 177ன் படி வீட்டு வரியை ரத்து செய்வதாக கூறினார்.

Shouting "Modi, Modi" will not satiate your hunger, Delhi Chief Minister Arvind Kejriwal today told a group of men who tried disrupting his rally by raising slogans in the name of Prime Minister Narendra Modi.

அடுத்த செய்தி