ஆப்நகரம்

நடு ரோட்டில் சிறுத்தை... அச்சத்தில் மக்கள்!

திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2020, 8:28 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு திருப்பதி சாலைகளில் வாகனப் போக்குவரத்தும், திருப்பதி மலையில் பக்தர்கள் நடமாட்டமும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாகனங்கள் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது ஒருமுறை சென்று வருவதும், தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமே அவற்றில் பயணிப்பதும் தற்போதைய நிலையாக உள்ளது.
Samayam Tamil நடு ரோட்டில் சிறுத்தை அச்சத்தில் மக்கள்


இதனால் திருப்பதி மலையில் வாகனங்களின் பேரிரைச்சலும், பக்தர்களின் பக்தி முழக்கமும் முடங்கிவிட்ட காரணத்தால் திருப்பதி மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும் சிறுத்தைகள், கரடிகள், மான்கள், மலைப்பாம்புகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாதாரணமாக திருப்பதி மலைக்கு வரத் துவங்கிவிட்டன. கடந்த சில நாட்களில் கரடிகள், மான்கள், காட்டுப் பன்றிகள் போன்றவற்றின் நடமாட்டம் திருப்பதி மலையில் தென்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி மலையில் உள்ள அவுட்டர் ரிங் ரோடு சாலைப் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் சிறுத்தை நடமாடிய பகுதிக்கு அருகாமையில் உள்ள பாலாஜி நகர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி