சென்னை சுங்கத்துறை இணையத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்!!
சென்னை சுங்கத்துறை இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
TOI Contributor 17 Nov 2017, 1:45 pm
சென்னை சுங்கத்துறை இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கத்துறை சென்னை மண்டலத்தின் இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அந்த இணையதளத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஹேக்கர்கள் திருடி இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவும், சுதந்திரம்தான் எங்களுடைய இலக்கு..காஷ்மீருக்கு தீவிரவாத அரசு தேவையில்லை. குழந்தைகளை கொல்ல வேண்டாம். இந்தியா என்பது காஷ்மீர் இணையாத ஒரு நாடு என்று ஹேக்கர்கள் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணையதளத்தை திறக்க முயற்சித்தபோது இணையதளம் முடக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த இணையதளம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டு இருப்பதாகவும், பிரதமர் கோடிக்கு எதிராக பதிவுகளை இட்டு இருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். இந்த இணையதளத்தை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை சென்னை மண்டலத்தின் இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அந்த இணையதளத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஹேக்கர்கள் திருடி இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவும், சுதந்திரம்தான் எங்களுடைய இலக்கு..காஷ்மீருக்கு தீவிரவாத அரசு தேவையில்லை. குழந்தைகளை கொல்ல வேண்டாம். இந்தியா என்பது காஷ்மீர் இணையாத ஒரு நாடு என்று ஹேக்கர்கள் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணையதளத்தை திறக்க முயற்சித்தபோது இணையதளம் முடக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த இணையதளம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டு இருப்பதாகவும், பிரதமர் கோடிக்கு எதிராக பதிவுகளை இட்டு இருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். இந்த இணையதளத்தை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.