ஆப்நகரம்

இஷ்ரத் வழக்கில் போலி சர்ச்சைகளை உருவாக்குகிறது மத்திய அரசு: சிதம்பரம்

''மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இஷ்ரத் ஜஹான் வழக்கில் போலி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 16 Jun 2016, 2:27 pm
''மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இஷ்ரத் ஜஹான் வழக்கில் போலி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chidambaram calls ishrat case a fake controversy
இஷ்ரத் வழக்கில் போலி சர்ச்சைகளை உருவாக்குகிறது மத்திய அரசு: சிதம்பரம்


ஆங்கில நாளிதழ் ஒன்றில் குஜராத் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியாகி இருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், ''குஜராத் மாநிலத்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் ஆவணங்கள் விஷயத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு போலி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்த வழக்கில் தேவையான அனைத்து ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலி சாட்சியங்கள் மூலம் அறிக்கைகள் தயாரித்துள்ளனர்.

கடந்த 2009, செப்டம்பர் 7ஆம் தேதி நீதிபதி எஸ்.பி., தமாங் தாக்கல் செய்த அறிக்கையில் இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்த என்கவுண்டரில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் வகையில் குஜராத் சட்டசபை மற்றும் சில இடங்களில் கூச்சல் எழுப்பப்பட்டது. இதனால்தான் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2009, செப்டம்பர் 29ஆம் தேதி, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளது மாநில அரசுகளின் கடமை'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் பி.கே. பிரசாத் சமர்ப்பித்த அறிக்கையில், இந்த வழக்கில் காணாமல் போன 4, 5 ஆவணங்களை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

அடுத்த செய்தி