ஆப்நகரம்

குடியரசு தினம்: இந்தியா வந்தடைந்தார் சிறப்பு விருந்தினர் ஜெய்ர் போல்சனாரோ

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்

Samayam Tamil 24 Jan 2020, 4:36 pm
டெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியா வந்தடைந்துள்ளார்.
Samayam Tamil பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்


பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு போல்சனாரோவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் 71ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

அச்சத்தின் உச்சம் - ஒரே நேரத்தில் 600 பள்ளிகளை மூடவைத்த ஒற்றை காட்டு யானை!

இதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இன்று டெல்லி வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் பிரேசிலின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக அவர் வந்துள்ளார்.


இந்தியாவுக்கு நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள அவர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியா - பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கபப்டும் எனவும், முக்கியமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகு என தெரிகிறது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பிரேசில் அதிபர் 27ஆம் தேதி மீண்டும் பிரேசில் செல்லவுள்ளார்.

அடுத்த செய்தி