ஆப்நகரம்

மனிதத்துவம் நிறைந்த தீர்ப்புகள் நீதித்துறையை மேம்படுத்தும்; பிரிவு உபசார விழாவில் தீபக் மிஸ்ரா!

புதுடெல்லி: நீதித்துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

TIMESOFINDIA.COM 1 Oct 2018, 6:14 pm
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த அக்டோபர் 10, 2011 முதல் பதவி வகித்து வருபவர் தீபக் மிஸ்ரா. இவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து டெல்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
Samayam Tamil Dipak Misra


அதில் கலந்து கொண்டு பேசிய புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தனிப்பட்ட நபரின் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளார். இவரது தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

இதையடுத்து பேசிய தீபக் மிஸ்ரா, என்னைப் பற்றி ஏராளமான விஷயங்கள் கூறுகின்றனர். நான் மனிதர்களை அவர்களது வரலாற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில்லை. ஒரு குழந்தைக்கு சமூகம் என்பது இரண்டாவது தாய். மனசாட்சி தெளிவாக இருந்தால் எந்தவொரு விஷயத்தையும் எளிதில் செய்து முடித்து விடலாம்.

இளம் வழக்கறிஞர்கள் நமது நீதித்துறையை மேம்படுத்துவார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் மனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஏழைகளாக இருந்தாலும் சரி. பணக்காரர்களாக இருந்தாலும் சரி. அனைவரின் கண்ணீரையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும். நீதித்துறையில் இருக்கும் சுதந்திரம், அதனை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.

அது அப்படியே தொடரும். உச்சநீதிமன்றம் என்பது அனைத்திற்கும் உச்சமாக இருக்கிறது. அதுவும் அப்படியே தொடர வேண்டும். ஒரு நீதிபதியாக எனது முழு பணிக்காலத்திலும், சமத்துவம் என்னும் நீதி தேவதையிடம் இருந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. பார் கவுன்சிலிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தற்போது மிகவும் திருப்திகரமாக ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்தார்.

Chief Justice of India Dipak Misra's farewell speech.

அடுத்த செய்தி