ஆப்நகரம்

​ பிரதமரின் சுதந்திர தின உரை :தலைமை நீதிபதி அதிருப்தி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் நீதிதுறை குறித்த பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 15 Aug 2016, 8:56 pm
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் நீதிதுறை குறித்த பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chief justice of india expresses disappointment over pms i day speech
​ பிரதமரின் சுதந்திர தின உரை :தலைமை நீதிபதி அதிருப்தி


நாட்டின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர், நீதிதுறை பற்றியும் நீதிதுறை நியமனங்கள் பற்றியும் பேசாத வருத்ததை ஏற்படுத்தியுள்ளதாக என தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேதனை தெரிவித்துள்ளார்

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு அதிகரித்தல் என பலவேறு விஷயங்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையில் நீதித்‌துறை குறித்தும் பிரதமர் பேசியிருக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாக்குர் கூறினார்.

நீதிபதிகள் இடமாற்றம் மற்றும் நியமனம் குறித்த கொலிஜியம் குழுவின் உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என தாக்குர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு மீது மீண்டும் தனது அதிருப்தியை தாக்குர் வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி