ஆப்நகரம்

ஜெகநாதர் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரார்த்தனை!

புரி ஜெகநாதர் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிரார்த்தனை.

Samayam Tamil 25 Sep 2021, 4:44 pm

ஹைலைட்ஸ்:

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒடிசா பயணம்
  • பிரசித்தி பெற்ற புரி ஜெகநாதர் கோயிலில் பிரார்த்தனை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil NV Ramana
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். புரி ஜெகநாதர் கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, கட்டாக் நகரில் ஒடிசா மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைக்கவிருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக எ.வி.ரமணா நேற்று ஒடிசாவுக்கு வந்தார். இந்நிலையில், இன்று புரி ஜெகநாதர் கோயிலில் உள்ள சிங்க வாயிலுக்கு அவர் வந்தார். அவரை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளர் வி.கே.பாண்டியன், ஜெகநாதர் கோயிலின் தலைமை நிர்வாகி கிரிஷண் குமார், மாவட்ட ஆட்சியர் சமர்த் வெர்மா ஆகியோர் வரவேற்றனர்.

யார் இந்த ஸ்னேகா துபே? - பாக். பிரதமர் இம்ரான் கானை தெறிக்கவிட்ட இந்திய பெண் அதிகாரி!
கோயில் வளாகத்தில் சுமார் 45 நிமிடங்களை செலவிட்டார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. அப்போது, கோயிலிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் அழகூட்டும் பணிகளை குறிப்பிட்டு கோயில் நிர்வாகத்துக்கு என்.வி.ரமணா பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த பயணத்தின்போது என்.வி.ரமணாவுடன் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் குமார் மல்லிக் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இன்று மாலை என்.வி.ரமணா டெல்லிக்கு புறப்படவிருக்கிறார்.

அடுத்த செய்தி