ஆப்நகரம்

பிரதமர் மோடி - உ.பி.,முதல்வர் தில்லியில் சந்திப்பு

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

TNN 21 Mar 2017, 2:14 pm
புதுதில்லி: உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Samayam Tamil chief minister of up yogi adityanath calls on the pm modi in new delhi
பிரதமர் மோடி - உ.பி.,முதல்வர் தில்லியில் சந்திப்பு


உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக பாஜக-வின் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 324 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் அம்மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், தற்போது தில்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Chief Minister of UP Yogi adityanath calls on the PM Modi in New Delhi

அடுத்த செய்தி