ஆப்நகரம்

ஒருவழியா இவரைப் பிடிச்சிட்டாங்க; கொரோனா இவருக்கும் பரவியிருக்குமா?- விசாரணை தீவிரம்!

டெல்லி தப்லிகி ஜமாஅத்தின் தலைவரை போலீசார் கண்டறிந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Apr 2020, 10:48 am
தலைநகர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத்தின் சார்பில் கடந்த மாதம் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியதன் மூலம் நாட்டில் பல பேருக்கு வைரஸ் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் ஒட்டுமொத்த வைரஸ் தொற்று இரட்டிப்பாக்கி உள்ளது.
Samayam Tamil தப்லிகி ஜமாஅத் தலைவர்


இதனைத் தொடர்ந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களை தாமாக வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தின.

முதலில் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது? - ரெடியாகும் கர்நாடகா!

இந்த சூழலில் தப்லிகி ஜமாஅத்தின் தலைவர் மவுலானா சாத் கந்தல்வி உள்ளிட்ட 6 பேர் மீது அரசின் உத்தரவுகளை மீறியதாகவும், அதிகப்படியான மக்களை கூட்டி மாநாடு நடத்தியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மவுலானாவிற்கு சொந்தமான பல்வேறு வீடுகளில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சூழலில் தான் ஜாகிர் நகரில் உள்ள வீட்டில் உறவினர் ஒருவருடன் மவுலானா தனிமைப் படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்குமா என்று அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரின் மருத்துவ அறிக்கைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். விரைவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.

கொரோனா வைரஸ்: இந்தியாவின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்!

முன்னதாக மவுலானா எங்கும் தலைமறைவாக இல்லை என்றும் தப்லிகி ஜமாஅத் மார்கஸின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். போலீசார் விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில் நேரில் ஆஜராவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். தற்போது அடுத்தக்கட்ட விசாரணை பற்றி போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி