ஆப்நகரம்

குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து சாமியார்களுக்கு அடிஉதை

அசாமில் குழந்தை கடத்தும் கும்பல் என்று நினைத்த பொதுமக்கள் 3 சாமியார்களை பிடித்து சராமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jul 2018, 4:32 pm
அசாமில் குழந்தை கடத்தும் கும்பல் என்று நினைத்த பொதுமக்கள் 3 சாமியார்களை பிடித்து சராமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Three-sadhus-570x320


வடமாநிலங்களில் இருந்து குழந்தை கடத்தும் கும்பல் தமிழகத்திற்குள் வந்ததாகவும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அண்மை காலமாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமக அப்பாவி வயதானவர்களும், மனநலம் குன்றியவர்களையும் பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் மகுர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தும் கும்பல் என்று நினைத்து 3 சாதுக்களை பொதுமக்கள் அடித்து துவம்சம் செய்தனர். அப்போது அதனை பார்த்து அங்கிருந்த ராணுவ வீரரும் போலீசாரும் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து மூன்று சாதுக்களையும் மீட்டனர்.

இதனையடுத்து அவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை என்றும் உண்மையான சாதுக்கள் தான் என்று கூறிய பின்பு அமைதியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து சாதுக்களை சமாதானம் செய்த போலீசார், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி