ஆப்நகரம்

குழந்தைகள் தினம்: வரலாறும் எதிர்காலமும்!

நாடு முழுவதும் நாளை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

Samayam Tamil 13 Nov 2020, 7:53 pm

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதியன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil குழந்தைகள் தினம்


1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று பிறந்த ஜவஹர்லால் நேருவை குழந்தைகள் நேரு மாமா என அழைப்பது வழக்கம். குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள்தான் இந்நாட்டின் உண்மையான பலம் எனவும், சமூகத்தின் அடித்தளம் எனவும் ஜவஹர்லால் நேரு மிக உறுதியாக நம்பினார். குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

காஷ்மீரில் கடும் சண்டை; இந்திய வீரர்கள் வீரமரணம் - செம அடி வாங்கிய பாகிஸ்தான்!

ஒருமுறை நேரு பேசியபோது, “இன்றைய குழந்தைகள்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப்போகிறார்கள். குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படி உலகளவில் நவம்பர் 20ஆம் தேதியன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இறந்தபிறகு இந்தியாவில் மட்டும் அவரது பிறந்தநாள் தேதியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி, குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் தாக்குதல்களையும் ஒழித்துக்கட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அடுத்த செய்தி