ஆப்நகரம்

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்கள் பெற க்யூவில் நிற்க வேண்டியதில்லை; வருகிறது மொபைல் ஆப்!

ரயில்வேயில் முன்பதிவில்லா டிக்கெட்களைப் பெற மொபைல் ஆப் வரவுள்ளது.

Samayam Tamil 9 Apr 2018, 10:52 am
சென்னை: ரயில்வேயில் முன்பதிவில்லா டிக்கெட்களைப் பெற மொபைல் ஆப் வரவுள்ளது.
Samayam Tamil Train Ticket
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்


ரயில் பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்களைப் பெற இணைய வசதி, மொபைல் ஆப் என பல்வேறு வசதிகள் உள்ளன. ஆனால் முன்பதிவில்லா டிக்கெட்களைப் பெற நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில், விரைவில் மொபைல் ஆப் வரவுள்ளது. இதற்கான நடவடிக்கையில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு மாநிலங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு ஆண்டுதோறும் வருகின்றனர். இவர் அனைவரும் முன்பதிவில்லா டிக்கெட்களைப் பெற்று பயணிக்கின்றனர்.

மேலும் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு ரயில்களில் செல்கின்றனர்.

இந்நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கு உதவும் வகையில், மொபைல் ஆப் உருவாக்கப்படுகிறது. R-Wallet எனப்படும் ஆன்லைன் வசதி மூலம் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தி விடலாம்.

முன்னதாக புறநகர் ரயில் டிக்கெட்கள், பிளாட்பாரம் டிக்கெட்கள் பெற மொபைல் ஆப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chuck queues, book unreserved train tickets now via mobile app.

அடுத்த செய்தி