ஆப்நகரம்

தியேட்டர்கள் 100% சீட்டுகளுடன் இயங்க அனுமதி!

சினிமா திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் முழுமையாக இயங்க கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 3 Feb 2021, 11:56 pm
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் திரையரங்குகளும் முழுவதுமாக மூடப்பட்டன.
Samayam Tamil cinema-hall


இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க சச்சின்? அரசாங்கத்தின் அழுத்தம் காரணமா?
திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கவே முதலில் முடிவு செய்யப்பட்டது. பிறகு கன்னட சினிமா தொழில்துறையினர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் அமைச்சர் சுதாகருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை இயங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்படி, நான்கு வாரங்களுக்கு மட்டும் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

அப்போ தண்ணீ இல்லயா? சானிடைசரை மடமடவென குடிச்சு கதிகலங்கிய ஆணையர்!
சினிமா தொழில்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏறக்குறைய ஒரு ஆண்டாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, திரையரங்குகளை மீண்டும் திறப்பதால் சினிமா தொழில்துறையினருக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி