ஆப்நகரம்

விமானப் பயணக் கட்டணம் உயரும் அபாயம்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

விமானப் பயணத்தின்போது பயணிகளுக்கு இடையே சமூக விலகலை பின்பற்றினால், பயணக் கட்டணத்தை உயர்த்த வேண்டி வரும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரே கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 8:49 pm
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வரும் 25 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், விமானப் பயணத்தின்போது பயணிகள் சமூக விலகலை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
Samayam Tamil social distance


அதற்கு, " விமானப் பயணத்தின்போது நடுவரிசை இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதிக்கப்படவில்லை என்றாலும், அது முறையான சமூக விலகலாக இருக்காது. சமூக விலகலுக்கான வரையறையின்படி, அதனை முறையாக பின்பற்றி விமானங்களை இயக்கினால், பயணக் கட்டணத்தை 33 சதவீதம் அதிகரிக்க வேண்டியவரும்" என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பின் முக்கிய அம்சமாக பொது இடங்கள், பொதுப் போக்குவரத்தில் சமூக விலகலை அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பினரில் இருந்து உள்ளூர் மருத்துவர் வரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

விமானப் பயணிகள் தங்களுக்கான பயிற்சியின்போதும் சமூக விலகலை முறையாக பின்பற்ற வேண்டும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமே அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், துறை அமைச்சரே சமூக விலகல் குறித்து இவ்வாறு கூறியுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி