ஆப்நகரம்

மனித உரிமை போராளிகள் கைது; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

நாடு முழுவதும் மனித உரிமை போராளிகளை கைதான சம்பவத்தில் போலீசார் மீது எதிர்ப்பு வலுக்கிறது.

Samayam Tamil 31 Aug 2018, 1:57 am
புதுடெல்லி: நாடு முழுவதும் மனித உரிமை போராளிகளை கைதான சம்பவத்தில் போலீசார் மீது எதிர்ப்பு வலுக்கிறது.
Samayam Tamil activists


மகாராஷ்டிர மாநிலத்தில் மனித உரிமை போராளிகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 5 பேரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். மனித உரிமை போராளிகள் கைதிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் அருந்ததி ராய், அருணா ராய், ஜிக்னேஷ் மேவானி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், சட்டவிரோத கைது நடவடிக்கை முறையான நடைமுறைகளை மீறிய செயல்.

சட்டத்தை அவமதிக்கும் செயல். தீய மற்றும் தவறான நோக்கமுடைய தாக்குதல். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்ட மகாராஷ்டிர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் வரையில், இதுபோன்ற கைது, தாக்குதல்கள், வன்முறைகள் தொடரும் என்று கண்டித்தனர்.

Civil Society Members condemn arrests of activists.

அடுத்த செய்தி