ஆப்நகரம்

தொழுகை நடத்த மசூதி அவசியம் தானா? முக்கிய வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு

மசூதி அவசியம் தானா என்ற முக்கிய வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 25 Sep 2018, 2:39 pm
இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு மசூதி அவசியம் தானா என்ற முக்கிய வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Samayam Tamil supreme court


கடந்த 1994ம் ஆண்டு அயோத்தி சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு மசூதி கட்டாயம் கிடையாது. பொதுஇடம் உட்பட அவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறந்தவெளியில் கூட தொழுகை செய்யலாம் என்று கூறப்பட்டது. மேலும், நீண்ட கால நன்மைக்காக எந்த ஒரு வழிபாட்டு தலங்களையும் அரசு கையகப்படுத்த முடியும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷர், அப்துல் நஷீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகோய் பதவியேற்கிறார்.

தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் நிலையில், தற்போது மசூதி அவசியம் தானா என்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலில் இந்த வழக்கும் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பானது, ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் புதிய திருப்பத்தை உண்டாக்கும் என்று சட்டவல்லுனர்கள் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி