ஆப்நகரம்

பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நெல்லூர் மாவட்டம் அருகே முழு ஆண்டு தேர்வில் 10/10 மதிப்பெண் எடுக்காததால் மனமுடைந்த 9ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 12 Apr 2017, 10:29 am
விஜயவாடா: நெல்லூர் மாவட்டம் அருகே முழு ஆண்டு தேர்வில் 10/10 மதிப்பெண் எடுக்காததால் மனமுடைந்த 9ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 10
பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை


பித்ரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தமுல்லுரி வினய்(14), ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரனான வினய் எப்போதும் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறுவான் என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பள்ளி தரத்தை நிரூபிக்க வேண்டி தேர்வில் 10/10 மதிப்பெண் பெற வேண்டும் என வினய்க்கு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வந்ததாக வினயின் உறவினர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த திங்களன்று, 9ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கீதாஞ்சலி ஆங்கிலப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்த வினய், நடந்து முடிந்த முழு ஆண்டு தேர்வில் 9.1/10 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைந்துவிட்டதாக அன்று நாள் முழுவதும் கவலையுடன் இருந்த வினய்க்கு அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறி அவரை தேற்றியுள்ளனர்.

எனினும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வினய் நெல்லூர் மாவட்டம் காவாலி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். வினயின் உடலை மீட்ட நெல்லூர் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Upset over not scoring 10/10 grade points in the annual examination, a meritorious Class IX student committed suicide by jumping in front of a train in Kavali town of Nellore district on Tuesday morning.

அடுத்த செய்தி