ஆப்நகரம்

காலநிலை மாற்றத்தால் 600 மில்லியன் இந்தியர்கள் 2050ல் பாதிக்கப்படுவார்கள்: உலக வங்கி

காலநிலை மாற்றத்தால் 2050ல் கிட்டதட்ட 600 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக வங்கி நடத்திய ஆய்வு முடிவில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2018, 4:18 pm
காலநிலை மாற்றத்தால் 2050ல் கிட்டதட்ட 600 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக வங்கி நடத்திய ஆய்வு முடிவில் தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil climate change will hit living standards of 600 million indians world bank
காலநிலை மாற்றத்தால் 600 மில்லியன் இந்தியர்கள் 2050ல் பாதிக்கப்படுவார்கள்: உலக வங்கி


காலநிலை மாற்றம் மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் குறித்துஉலக வங்கி ஆய்வு நடத்தியது. ’தெற்கு ஆசியா ஹாட் ஸ்பாட்’ (South Asia’s Hotspots)என்ற தலைப்பில் இந்த ஆய்வு அறிக்கையானது நேற்று வெளியிடப்பட்டது. திடுக்கிடும் தகவல்கள் இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் வெளியான தகவல்கள்

காலநிலை மாற்றத்தால்இந்தியாவில் 2.8% அளவில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்படும். இதனால் 2050ல் 1.1 ட்ரில்லியன் டாலர்நஷ்டம் ஏற்படும். இந்தியாவில் காலநிலை மாற்றாத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ’ஹாட் ஸ்பாட்’ இடங்கள் என்று இந்த ஆயுவில் பல மாவட்டங்கள் கண்யறியப்பட்டுள்ளன.

ஹாட் ஸ்பாட்என்றால் என்ன (hot spot).

கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை ஹாட் ஸ்பாட் என்று குறிப்பிட்டுள்ளனா்.

இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட 9 ஹாட் ஸ்பாட் இடங்கள் பின்வருமாறு

சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ்,ராஜஸ்தான், உத்தர பிரதேசம்,மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா,ஆந்திர பிரதேஷ், பஞ்சாப். இந்த மாநிலங்களில் அதிக அளவு மக்கள் கால நிலை மாற்றத்தால் 2050யில் பாதிக்கப்படுவார்கள்.

கால நிலை மாற்றத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் பகுதிகள் பின்வருமாறு

சந்திராப்பூர், பண்டாரா, கொண்டியா, வர்தா, நாக்பூர். இந்த நகரங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. தற்போதே இந்த பகுதிகளில் வாழும் மக்கள் இதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின்படி எல்லா நாடுகளும் மாற்றத்தை அமல்படுத்தினாலும்கூட இந்த பாதிப்புகளில் இருந்து வெளிவர இயலாது என்று ஆய்வின் தகவல்கூறுகிறது.

இந்த ஆய்வை மேற்கொண்டகுழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான மணிகூறியதாவது ‘இந்த ஆராய்ச்சியானது மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆய்வில் வெளியான தகவல் உலக வங்கியால் சரி பார்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. மேலும் அரசியல்வாதிகள் தான் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி