ஆப்நகரம்

கார்கில் போர் நினைவிடத்தில் முதல்வர் நாராயணசாமி மரியாதை!

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு சின்னத்தில் முதல்வர் நாராயணசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் முன்னாள் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Samayam Tamil 16 Dec 2018, 2:09 pm
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு சின்னத்தில் முதல்வர் நாராயணசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil பெய்ட்டி புயல் காரணமாக விசாகபட்டினத்தில் கடல் சீற்றம்!
பெய்ட்டி புயல் காரணமாக விசாகபட்டினத்தில் கடல் சீற்றம்!


கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் பகுதியை ஆக்கிரமித்தனர். இதையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போரில் 490 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு முதல்வர் நாராயணசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் முன்னாள் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அடுத்த செய்தி