ஆப்நகரம்

கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Jun 2017, 12:44 am
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
Samayam Tamil cm shivraj chouhan announces rs 1 cr for families of deceased in mandsaur protest
கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி


விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரா மத்திய பிரதேச விவசாயிகள் மன்ட்சவுர் என்னும் இடத்தில் போராட்டம் நடத்துகின்றனர். இதனை முன்னிட்டு, பிபல்யா மண்டி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக, கூறி அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாய்பர்சநாத் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 விவசாயிகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, செவ்வாய் இரவு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
#WATCH: CM Shivraj Chouhan appeals farmers to be peaceful, announces Rs 1 cr for families of deceased, 5 lakh for those injured in Mandsaur pic.twitter.com/kfBxrFrw4m — ANI (@ANI_news) June 6, 2017

அடுத்த செய்தி