ஆப்நகரம்

"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு": முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை..!

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

TNN 22 May 2017, 3:16 pm
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil coal scam case ex coal secretary and 2 former officials sentenced to 2 years
"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு": முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை..!


இந்த வழக்கில் நிலக்கரி ஆணைய முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா மற்றும் இரண்டு நிலக்கரித்துறை முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்த விபரங்கள் இன்று வெளியாகியுள்ளது.

இதன்படி நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா, இணைச் செயலாளர் கே.எஸ்.குரோஃபா மற்றும் இயக்குநர் கே.சி.சமாரியா ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கிலிருந்து ஆடிட்டர் அமித் கோயல் என்பவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மேலும் முறைகேடான முறையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெற முயன்றதாக கேஎஸ்எஸ்பிஎல் நிறுவனத்தின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதிக்கலாம் என கூறப்படுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், தன்னிச்சையான முறையில் தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள சுமார் 40 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததாக முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் குப்தா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

coal scam case: Ex-coal secretary and 2 former officials sentenced to 2 years

அடுத்த செய்தி