ஆப்நகரம்

மும்பையில் வீட்டு டாய்லெட்டில் எட்டிப் பார்த்த நாகப்பாம்பு!!

மும்பையில் ஒருவரது வீட்டின் மேற்கிந்திய டாய்லெட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்ததையடுத்து அந்தக் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

TOI Contributor 17 Jun 2016, 3:12 pm
மும்பையில் ஒருவரது வீட்டின் மேற்கிந்திய டாய்லெட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்ததையடுத்து அந்தக் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
Samayam Tamil cobra pops out of loo in trombay
மும்பையில் வீட்டு டாய்லெட்டில் எட்டிப் பார்த்த நாகப்பாம்பு!!


மும்பை, டிராம்பேவில் அணுசக்தி நகர் உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் வசித்து வரும் ஒருவரது குடும்பத்தைச் (பெயர் வெளியிடவில்லை) சேர்ந்த ஒரு உறுப்பினர் மேற்கிந்திய டாய்லெட்டில் ஒதுங்கி விட்டு வீட்டுக்குள் வந்தார். இதற்கு பின்னர் 10 நிமிடங்களில் அந்த கழிப்பறையில் இருந்து ஒரு நாகப் பாம்பு தலையை நீட்டிக் கொண்டு வெளியே வந்தது.

இதையடுத்து, பாம்பு பிடிக்கும் ஆர்.வி. ராகவன் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, பாம்பு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து, ராகவன் கூறுகையில், ''2வது மாடிக்கு பாம்பு வந்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது மிகவும் அபூர்வமானது. மாடிகளுக்கு பாம்பு ஏறுவதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். தண்ணீர் அல்லது ஈரப்பதத்தை தேடி வருவது வழக்கம்'' என்றார்.

பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்ட்டது.

அடுத்த செய்தி