ஆப்நகரம்

ரூ. 200 கோடி பாம்பு விஷத்தை கடத்தியவர்கள் கைது !

ரூ. 200 கோடி மதிப்புள்ள கோப்ராவின் விஷத்தை கடத்திச்ச்சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

TOI Sports 16 Oct 2016, 2:43 pm
ஜால்பாய்குரி: ரூ. 200 கோடி மதிப்புள்ள கோப்ராவின் விஷத்தை கடத்திச்ச்சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil cobra venom worth rs 200 crore seized in siliguri
ரூ. 200 கோடி பாம்பு விஷத்தை கடத்தியவர்கள் கைது !


பிரான்சில் இருந்து சிலிகுரிக்கு கொண்டு செல்லப்பட இருந்த கோப்ராவின் விஷத்தை வனத்துறை கைப்பற்றினர். இந்த விஷயத்தை சீனாவின் கள்ளசந்தையில் விற்பனை செய்ய எடுத்துச்செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோப்ராவின் விஷத்தை சுமார் 5 பெல்ஜியம் கண்ணாடிக்குடுவையில், அடைத்து கொண்டு சென்ற குமார் தாஸ், பிபுல் சர்கார், பிண்டு பானர்ஜீ ஆகியோரை போலீசார் மடக்கிபிடித்தனர். இவர்களுடன் ஒரு கைத்துப்பாக்கி, 4 முழுமையாக நிற்ப்பட்ட தோட்டா பெட்டிகள், மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:
கோப்ரா விஷத்துக்கு சீனாவில் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் உள்ளது. இதைக்கொண்டு பலமருந்துகளை தயாரிக்க முடியும். இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 200 கோடிகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி