ஆப்நகரம்

டோல்கேட் கட்டணமே கிடையாது; செம ஜாலியா ரவுண்ட் வரும் வாகன ஓட்டிகள்!

டோல்கேட் முற்றுகையிடப்பட்ட காரணத்தால் கட்டணம் வசூலிக்க முடியாத சூழலில் வாகன ஓட்டிகள் இலவசமாக சென்று வருகின்றனர்.

Samayam Tamil 26 Dec 2020, 1:02 pm
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 31வது நாளாக பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் இருதரப்பும் விடாப்பிடியாக இருந்து கொண்டிருக்கிறது. உண்ணாவிரதம், டோல்கேட் முற்றுகை, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்தல், கடிதம் எழுதுதல், தேசிய அளவிலான வேலைநிறுத்தம் என பல்வேறு விதங்களில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
Samayam Tamil No Fee at Toll Plaza


இந்நிலையில் டோல்கேட் முற்றுகையால் வாகனங்களிடம் உரிய கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ஹிமாலயன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சந்திமந்திர் டோல்கேட் அமைந்துள்ளது. இவ்வழியாக ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வர்.

அமித் ஷாவின் சிக்னலுக்கு வெயிட்டிங்; முதல்வரின் வேண்டுதல் நிறைவேறுமா?
அதுவும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை ஒட்டி கூட்டம் அலைமோதும். நடப்பாண்டு கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்துள்ளனர். இதையொட்டி சந்திமந்திர் டோல்கேட் வழியாகச் சென்றவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருந்தது.

அதாவது இந்த டோல்கேட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சென்று வருகின்றன. கடந்த வியாழன் அன்று மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 39,614 வாகனங்கள் சந்திமந்திர் டோல்கேட் வழியாக சென்றுள்ளன. அதில் 28,704 வாகனங்கள் பாஸ்டேக் பரிமாற்றம் செய்யக்கூடியவை.

தொடரும் திரைக் கலைஞர்களின் மரணம் - நீரில் மூழ்கி அனில் நெடுமங்காடு உயிரிழப்பு!
அதற்கடுத்த நாட்களில் வாகனப் போக்குவரத்து 40 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக பயணித்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கள் உரிமைக்காக போராடி வரும் விவசாயிகளை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் இல்லையேல் நமக்கு உணவில்லை என்ற விஷயத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

அடுத்த செய்தி