ஆப்நகரம்

கழுத்தில் கத்தி வைப்பேன்: ஓவைசியை மிரட்டும் ராஜ் தாக்ரே

மகாராஷ்டிரா வாருங்கள் கழுத்தில் கத்தி வைக்கிறேன் என்று அசாசுதீன் ஒவைசியை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே மிரட்டியுள்ளார்.

TNN 9 Apr 2016, 6:37 pm
மும்பை: மகாராஷ்டிரா வாருங்கள் கழுத்தில் கத்தி வைக்கிறேன் என்று அசாசுதீன் ஒவைசியை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே மிரட்டியுள்ளார்.
Samayam Tamil come to maharashtra i will put a knife to your throat raj thackeray tells owaisi
கழுத்தில் கத்தி வைப்பேன்: ஓவைசியை மிரட்டும் ராஜ் தாக்ரே


நாடு முழுவதும் "பாரத் மாதா கி ஜே" கூறுவது தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. ஒரு சாரார் பாரத் மாதா கி ஜே என்று கூறினால் தான் தேசபற்று உள்ளவர்கள் என்றும், பாரத் மாதா கி ஜே என்று கூறினால் தான் தேசபற்று உள்ளவர்கள் என அர்த்தம் இல்லை என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.

இதனிடையே, அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி, தனது கழுத்தில் கத்தி வைத்தாலும் கூட பாரத் மாதா கி ஜே என்று கூற மாட்டேன் என்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ராஜ் தாக்ரே, "மகாராஷ்டிரா வாருங்கள் கழுத்தில் கத்தி வைக்கிறேன்" என்றார்.

மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி தவற விட்டு விட்டார் என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், சிவசேனா கட்சியையும் அவர் சரமாரியாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி