ஆப்நகரம்

அச்சுறுத்திய அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடுரோட்டில் மக்கள் கொடுத்த தண்டனை...

மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுனர்களுக்கு நகராட்சி அளித்த தண்டனை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Samayam Tamil 19 Dec 2019, 1:26 pm
இந்தியாவில் பேருந்து பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. பொதுவாக வெகு தூரம் செல்லும் பேருந்துகள் விரைவாக செல்வது வழக்கம். பயணிகள் எதிர்பார்ப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் ஒரு நகருக்குள்ளேயே சென்று வரும் பேருந்துகள் பஸ் ஸ்டாப், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அப்பேருந்து ஓட்டுநர் மிதமான வேகத்தில் பேருந்தை இயக்குவதுதான் உசிதமானது.
Samayam Tamil 1அச்சுறுத்திய அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடுரோட்டில் மக்கள் கொடுத்த தண்டனை... இனி பயம் வரும்.!


ஆனால் பல்வேறு இடங்களில் லோக்கல் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மிக வேகமாக பேருந்தை ஒட்டி செல்வதால் அனைத்து நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி செல்லாமல் தங்கள் போக்கில் வாகனத்தை இயக்குகின்றனர்.

இதனால் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகளுக்கும் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் கோபத்தையும், அச்சுறுத்தலையும் உண்டாக்குகிறது. அப்படி செயல்பட்ட பேருந்து ஓட்டுனர்களுக்கு தக்க தண்டனையை அளித்துள்ளது ராவ் நகராட்சி.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் பெரும்பான்மையான அரசு பேருந்து ஓட்டுனர்கள் போக்குவரத்து நெரிசலை கூட பொருட்படுத்தாமல் வாகனத்தை அதி வேகமாக இயக்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இதை உறுதிப்படுத்திய ராவ் நகராட்சி தலைவர் சிவநாராயணா, சம்மந்தபட்ட ஓட்டுனர்களுக்கு மக்கள் முன்னிலையில் தண்டனை தர முடிவெடுத்தார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

அதன் படி நகரில் வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்துகளை மடக்கி அதன் ஓட்டுனரை பேருந்தின் மேற்பரப்பில் நிற்கவைத்து தோப்புக்கரணம் போட வைத்தார். சம்மந்தப்பட்ட ஓட்டுநர்களும் வேறு வழியின்றி தண்டனையை ஏற்று மக்கள் முன்னிலையில் தோப்புக்கரணத்தை போட்டுவிட்டு, இனிமேல் பேருந்தை வேகமாக இயக்க மாட்டோம் என உறுதி எடுத்தனர்.

இந்த வீடியோவை எடுத்த அப்பகுதி மக்களில் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி