ஆப்நகரம்

ப்ளீஸ், எங்க பெண் குழந்தைகளை விட்டிருங்க- நித்யானந்தா மீது பாய்ந்தது அடுத்த சர்ச்சை!

நித்யானந்தா ஆசிரமத்தில் இரண்டு பெண் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Nov 2019, 8:19 am
ஆன்மீக குரு நித்யானந்தா பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ”பரமஹம்ச நித்யானந்த தியான பீடம்” என்பதை தோற்றுவித்தார். இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil Nithyananda


நடிகை ரஞ்சிதா உடன் நெருக்கமாக இருந்த வீடியோ கசிந்தது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், ஆசிரமத்திற்காக பொது இடங்களை வளைத்து போட்டது, இளம்பெண்களை ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி தங்க வைத்தது, சிறுவர், சிறுமியரை துன்புறுத்துவது என பல்வேறு சர்ச்சைகள் நித்யானந்தாவை சுற்றி வருகின்றன.

சாய் பாபா புகழ்பாடும் தமிழிசை

இருப்பினும் இவரைத் தேடி வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெற்றோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், கடந்த 2013ஆம் ஆண்டு தங்களின் 3 பெண் குழந்தைகளை பெங்களூருவில் உள்ள நித்யானந்தா நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்தோம்.

பின்னர் எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் 3 பெண் குழந்தைகளையும் அனுப்பி விட்டனர். எங்கள் குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்ற போது அனுமதி வழங்கப்படவில்லை.

என்னது 1,000 ஏக்கர் நிலமா? நிரூபித்தால் அதை திமுகவுக்கே தந்துவிடுகிறேன் : ராமதாஸ் சவால்

இதையடுத்து போலீசார் உதவியுடன் ஒரு பெண் குழந்தையை மீட்டு வந்துவிட்டோம். ஆனால் மேலும் 2 குழந்தைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

பின்னர் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக அகமதாபாத் போலீசார் நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்..! அப்போ 50 வயது வரை காக்க வேண்டுமா? சிறுமி ஏக்கம்..

இந்த விவகாரத்தில் குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி