ஆப்நகரம்

தானியங்கி ரயில்வே சிக்னல்களுக்காக ரூ.78,000 கோடி!

சிக்னல்களை முற்றிலும் தானியங்கி முறைக்கு மாற்றுவது உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு அம்சங்களுக்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 28 Jan 2018, 6:14 pm
சிக்னல்களை முற்றிலும் தானியங்கி முறைக்கு மாற்றுவது உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு அம்சங்களுக்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil complete automation of railways signalling system on the cards
தானியங்கி ரயில்வே சிக்னல்களுக்காக ரூ.78,000 கோடி!


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடர் தொடக்க நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சிக்னல்களை முற்றிலும் தானியங்கி முறைக்கு மாற்றுவது உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு அம்சங்களுக்காக ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிகிறது.

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நேர்ந்த ரயில்வே விபத்துக்களில் 19% ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங் உள்ள பகுதிகளில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி