கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடத்துகிறது. பல மாதங்களாக முதல்வர் பாரிக்கர் உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால் அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.
இச்சூழலில் கோவாவின் முன்னாள் துணை முதல்வரான மபுசா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டிசோசா (64) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 13ஆகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், அந்த மாநில காங்கிரஸ் கட்சி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்கள் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்’ எனவும் ‘பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’ எனவும் கோரப்பட்டுள்ளது.
40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் மேலும் குறையக்கூடும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் மிருதுளா சின்ஹாவை நேரில் சந்தித்து பேசவும் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது.
இச்சூழலில் கோவாவின் முன்னாள் துணை முதல்வரான மபுசா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டிசோசா (64) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 13ஆகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், அந்த மாநில காங்கிரஸ் கட்சி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்கள் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்’ எனவும் ‘பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’ எனவும் கோரப்பட்டுள்ளது.
40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் மேலும் குறையக்கூடும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் மிருதுளா சின்ஹாவை நேரில் சந்தித்து பேசவும் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது.