ஆப்நகரம்

அடுத்த ஷாக்: ராகுல் காந்திக்கும் இப்படியா நடக்கணும்!

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 3:42 pm
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது பேரலை மிகவும் தீவிரமாக வீசிவருகிறது. தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ளது.
Samayam Tamil rahul gandhi


தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தும் பாதிப்பு குறைந்தபாடில்லை. அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடைகளுக்கு கட்டுப்பாடு: கொரோனாவால் வந்த வினை!
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஷாக் நியூஸ்: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட போதும் அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அடுத்த செய்தி