ஆப்நகரம்

பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி: காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் காங்கிரஸ் ரகசிய சந்திப்புகள் நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 10 Dec 2017, 4:19 pm
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் காங்கிரஸ் ரகசிய சந்திப்புகள் நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil congress held secret meeting with pakistan envoy at aiyars house pm modi
பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி: காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு


குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான போட்டியில் உள்ளன. படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் பாஜகவுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியும் பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், பிரதமர் நரேந்திர மோடியை “நீசத்தனமானவர்” என்று சாடினார். இந்த கருத்து பெரும் சர்ச்சைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள பலன்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாகத் தாக்கினார். “மணி சங்கர் ஐயர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றி செய்தித்தாள்களில் வெளியான செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். முன்னாள் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதற்கு அடுத்த நாளே என்னைப் பார்த்து நீசத்தனமானவன் என்று கூறுகிறார்.” என்று மோடி குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் நம் நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் பாகிஸ்தானியர்களுடன் எதற்காக ரகசியமாக பேச வேண்டும்? பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இயக்குனர் அர்ஷத் ரபீக் குஜராத் முதல்வராக அகமது படேலை ஆக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தாங்கள் செய்யும் ரகசிய வேலை என்ன என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.” என்றும் மோடி தெரிவித்தார்.

அடுத்த செய்தி