ஆப்நகரம்

சோனியாவுக்கு என்னாச்சு? ராகுல், பிரியங்கா உடன் வெளிநாடு பயணம்!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2022, 11:08 am
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (75) கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் அவருடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
Samayam Tamil sonia gandhi rahul gandhi


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர், எங்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர், எப்போது நாடு திரும்புவார்கள் என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும் செப்டம்பர் 4ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘மேகங்காய் பார் ஹல்லா போல்’ பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு திடீரென பெருகும் ஆதரவு: சசிகலா காரணமா? எடப்பாடி ஷாக்!

சோனியா காந்தி புதிதாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினார். இது மரியாதைநிமித்தமான சந்திப்பு என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்திருந்தது.
திரௌபதி முர்மு - சோனியா சந்திப்பு: குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மோடி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைக்கவும் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி 148 நாட்கள் 3,500 கி.மீ தூரம் 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் நோக்கி செல்கிறார். இது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி