ஆப்நகரம்

பள்ளத்துக்குள் தூக்கி வீசப்படும் கொரோனா சடலங்கள்: காங்கிரஸ் பிரமுகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்களை சுகாதார பணியாளர்கள் மூட்டை போல் கட்டி, பெரிய பள்ளத்துக்குள தூக்கியெறியும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jun 2020, 9:17 pm
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடலை முறையாக தகனமோ, அடக்கமோ செய்வது குறித்து விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil corona


இந்த நிலையில் கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதியில், கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்களை அந்த மாநில சுகாதாரப் பணியாளர்கள் மூட்டை போல் கட்டி, ஒரு பெரிய குழிக்குள் தூக்கியெறிகின்றனர். மொத்தம் மூன்று சடலங்கள் இப்படி ஒன்றபின் ஒன்றாக ஒரே குழியில் தூக்கி வீசப்படுகின்றன.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அத்துடன், கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மனிதாபிமானமற்ற முறையில் இப்படி தூக்கி வீசப்படுவதை காணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைகளை மாநில அரசு எவ்வாறு கையாளுகிறது என்பதற்கு இந்த சம்பவமே விரும்பத்தகாத உதாரணம்.


கொரோனா சடலங்களை இப்படி மனிதாபிமானமற்ற முறையில் கையாள்பவர்கள் மீது மாநில பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதது என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி