ஆப்நகரம்

எதுவும் தவறில்லை; எப்படி குற்றமாகும்?- பத்திரிகை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த ப.சிதம்பரம்!

ஊடகத்தின் மீது மாநில அரசு வழக்கு தொடர்ந்த செயலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 12:37 pm
உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத் போலீசார் நேற்றைய தினம் ”தி ஒயர்” ஊடகத்தின் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 188 மற்றும் 505(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், “தி ஒயர்” இணையதளத்தில் வெளியானதாக செய்தி ஒன்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது டெல்லியில் தப்லிகி ஜமாத் மாநாடு நடைபெற்ற அதே நாளில் அயோத்தியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராம் நவமியை ஒட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார்.
Samayam Tamil ப.சிதம்பரம்


இது மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். பக்தர்கள் அனைவரையும் கொரோனா வைரஸில் இருந்து கடவுள் ராமர் காப்பாற்றுவார் என்று ஆச்சாரிய பரமஹன்ஸ்கள் தெரிவித்துள்ளனர்.

மோடி கடந்த மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவிலான முடக்கத்தை அறிவித்தார். அதன்பிறகு எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்துவது சரியல்ல. எனவே ஆதித்யநாத் அதிகாரப்பூர்வ உத்தரவுகளை மீறி செயல்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிற்கு ஹேப்பி நியூஸ்; இந்த தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறையுமாம்!

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள “தி ஒயர்” ஊடகம், நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையின் அடிப்படையில் தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பற்றி யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலில் உ.பி போலீசார் ஈடுபடுவது போலத் தோன்றுகிறது.

இந்த வழக்குப்பதிவு பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. ஜூன் 2019ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

கருத்து சுதந்திரம் என்பது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை எனக் கூறியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ”தி ஒயர்” பதிவிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையே.

பின்னர் எப்படி குற்றமாகும்? கருத்து சுதந்திரத்தை, பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி