ஆப்நகரம்

விஜயகாந்த் ஸ்டைலில் 'பளார்' விட்ட சித்தராமையா; அதுவும் இந்த விஷயத்தில்...!

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தனது உதவியாளருக்கு பளார் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 2:55 pm
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா. இவர் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மைசூரு விமான நிலையத்தில் இன்று தனது உதவியாளரின் கன்னத்தில் ’பளார்’ என்று அறை விட்டுள்ளார்.
Samayam Tamil Siddaramaiah


இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட நபர் சித்தராமையாவின் காதில் செல்போனை வைக்க முயற்சித்துள்ளார். அதாவது, சில அதிகாரிகளிடம் தனக்காக பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கைது நடவடிக்கையால் கர்நாடகாவில் டிகே சிவகுமார் செல்வாக்கு இழக்கிறாரா?

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உதவியாளரின் கன்னத்தில் சித்தராமையா அறைந்துள்ளார். 71 வயதாகும் சித்தராமையா விரைவாக கோபம் கொள்ளக் கூடியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ ஒருவரைப் பற்றி பெண் காங்கிரஸ் தொண்டர் சித்தராமையாவிடம் புகார் அளிக்க வந்துள்ளார்.

30 நாள் ஆச்சு; இன்னும் இயல்பு நிலை வரலயாம்- பெரும் சிரமத்தில் காஷ்மீர் மக்கள்!

அப்போது கோபத்தில் அப்பெண்ணை திட்டியுள்ளார். மேலும் மைக்கை பிடுங்கி எறிய முயற்சித்துள்ளார். அப்போது தவறுதலாக அப்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து விட்டார். இந்த சம்பவத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு, அப்பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியாக, அவர் எனது தங்கை போன்றவர் எனக் கூறியிருந்தார். அந்த சம்பவத்தின் போது, சித்தராமையாவை பாஜகவினர் துச்சாதனா என்று விமர்சனம் செய்தனர்.

ரொம்ப கிட்ட வந்தாச்சு; நிலவிற்கு ‘ஹாய்’ சொன்ன விக்ரம் லேண்டர்- வெற்றிப் பாதையில் சந்திரயான் -2!

அடுத்த செய்தி