ஆப்நகரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள்- காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி!

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Samayam Tamil 20 Aug 2019, 9:28 am
இந்திய நாட்டின் 6வது பிரதமராக பதவி வகித்தவர் ராஜீவ் காந்தி. கடந்த 1984ஆம் ஆண்டு தனது தாயும், பிரதமருமான இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின், ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.
Samayam Tamil Rajiv Gandhi


40 வயதில் பொறுப்பேற்று, நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 1991ஆம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது, மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், புபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு எனது அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.


Also Read:

பிரிவினைவாதத் தலைவருக்கு இன்டர்நெட் இணைப்பு: பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

ப.சிதம்பரம் நேரில் ஆஜராக சம்மன்; இம்முறை சிக்கிக் கொண்டது இப்படியொரு வழக்கில்...!

மோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்கான்!

அடுத்த செய்தி